அசல் என்பது உருசதுச்சொல் என்பர். ஆனால் அது தமிழ் என்றே தெரிகிறது.
அயல் நாட்டுப் பொருளட்கள் உயர்வானவை என்ற கருத்து இன்றும் பலரிடை நிலவுகிறது. அவையே மூலம் அல்லது முதல் என்ற கருத்தும் உள்ளபடியே காணப்படுகிறது.
அயல் என்ற சொல்லே திரிந்து அசல் என்று ஆகிப் புதிய பொருள் பெற்றுள்ளது.
வாயில் – வாசல், நேயம் – நேசம் என்பதுபோன்ற திரிபே இதுவாகும்.
சில சொற்கள் எழுத்து திரிந்தாலும் பொருள் மாறுபாடு அடைவதில்லை. வேறு சில தொடர்புடைய புதுப்பொருளை மேற்கொண்டுவிடும்.
இவ்வகையில் அசல் என்பது தொடர்புடைய புதுப்பொருள் மேற்கொண்டது.
தமிழிலிருந்து பின் அது உருது மொழிக்குப் பரவியிருக்கலாம். இது இயல்பானதே ஆகும்.